Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதுப் பொழிவுடன் ஆரம்பமாகியுள்ள உளநல மருத்துவ சேவை.

தகவல் - டொக்டர் சியாட் (MBBS)

சம்மாந்துறை ஆதார வைத்திய உளநல பிரிவுக்கு நீண்டகாலமாக தனியான வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அண்மையில் டாக்டர் ஆர். குருபரன் அவர்கள் உளநல துறையில் விஷேட பயிற்சிபெற்று அதன் பிற்பாடு இப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிற்பாடு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவு திறண்பட இயக்குகின்றது. தற்போது ஏனைய வைத்தியசாலைகளுக்கு கிளினிக்கிற்குச் சென்றவர்கள் மீண்டும் எமது வைத்தியசாலைக்கு இச் சேவையைப் பெறுவதற்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கலாநிதி ஏ. இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டலில் ஒருங்கிணைக்கப்பட்ட வினைத்திறன்மிக்க சேவையினை வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் அனுசரணையுடன் உளநல சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகி அவற்றிற்குரிய தீர்வினை நிறைவேற்றுவதற்காக தனியாக உளநல நோய்களுக்கான சிகிச்சையளிக்கும் மையமாக இல்லாமல் அதனுடன் தொடர்புடைய சமூகரீதியான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கீழ் காணும் உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையினை வழங்கும் நோக்கின் அடிப்படையில் இக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

உளநல பிரிவு தாதிய உத்தியோகத்தர் , உளநவ வளவாளர்,எஸ்.எம்.ஜமான் , கல்விப் பிரதிப்பணிப்பாளர், மாவட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, மருந்துகள் மற்றும் ஔடதங்கள் , சிறைச்சாலைக்கான பொறுப்பு உத்திாயகத்தர், அரச சார்பற்ற நிறுவணங்கள், சிறுவர் பாதுகாப்புக்கான பொறுப்பு உத்தியோகத்தர். பெண்கள் அபிவிருத்திக்கான உத்தியோகத்தர் பொலீஸ் பிரதிப் பொறுப்பதிகாரி நசீர், உளநலம் சம்பந்தப்பட்ட வளவாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையினை வழங்குவதற்கு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டு அமூல்படுத்தப்படவுள்ளது.

உதாரணமாக

1.உளநல பாதிப்புக்குட்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பையும் மற்று கல்விலையத் தொடர்வதற்குரிய வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுசரணைகளுடன் நிறைவேற்றல்.

2.வைத்தியசாலையில் உளநல சேவைக்கு அப்பால் மேற்கூறிய உத்தியோகத்தர்களின் சேவையினை தேவைப்படும்போது அவ் உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு தீர்வுகாணல்.  உதாரணம் பாலியல் ரீதியான வண்முறை, சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியன.

3. உளநலம் பாதிப்புக்குட்பட்டவர்களில் சிலர் கிளினிக்கிற்கு வராமல் இருப்பவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளினுாடாக அடையாளம் கண்டு அவர்களை வரவழைத்தல் அல்லது குறித்த நோயாளியின் இடத்திற்குச் சென்று சிகிச்சையழித்தல்.

4.பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கான போதைப்பொருள் பாவனை சம்பந்தமான அறிவுறுத்தப்படும் நடவடிக்கையாக பெற்றோருக்கு தெிளிவுட்டல் நிகழ்ச்சித்திட்டம்.

இவ்வாறான பல உளநல சமூகப்பிரச்சினைகள் ஆராயப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றுவதற்காக மேற்கூறிய ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கூட்டப்படும். இதனால் நோயின் தாக்கத்திற்குக் காரணமாகிய (றுாட்கோஸ்) கண்டறிய்பட்டு இவ்வகையான தீர்வினைக்கொடுப்பதன் மூலம் ஒருகிணைக்கப்பட்ட உளநல மருத்துவ சேவையினை வழங்க முடியும். 

இப்படிக்கு,

டாக்டர் கலாநிதி ஏ . இஸ்ஸடீன்,
வைத்திய அத்தியட்சகர்,
ஆதார வைத்தியசாலை,
சம்மாந்துறை.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe