சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்னாக சென்றிருந்த எம்.டி. கங்கேஷ்வரி எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயார் தொடர்பில் இது வரையில் எத்தகைய தகவல்களும் வெளியாகாத நிலையில் அவர் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்கள் உதவிய நாடியுள்ளது.
ஆகவே, அவர் தொடர்பில் தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றிருப்பின் 0114374384-0112864112-0112880500 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(ஆர்.விதுஷா - வீரகேசரி)