Ads Area

டுபாயில் (UAE) வாகனம் ஓட்டும் அனைவரது கவனத்திற்கு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டும் அனைவருக்குமான முக்கிய அறிவுரை ஒன்றை சம்மாந்துறை24 இணையத்தளம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது.

தற்போது ரமழான் விடுமுறை-ஹஜ் விடுமுறைகள் என அனைத்து விடுமுறைகளும் நிறைவுற்ற நிலையில் டுபாயில் பாடசாலைகள் ஆரம்பித்துள்ளதனை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தற்போது பாடசாலை ஆரம்பமாகியுள்ளதனைத் தொடர்ந்து ஏற்படும் சாலை நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரக பொலிசார் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

யாராவது பாடசாலையை அண்மித்த பகுதிகளில் வேகமாக வானம் ஓட்டிச் சென்றாலோ, அல்லது பாடசாலை வாகணங்களுக்கு வழிவிடாது மறித்து நின்றாலோ, அல்லது பாடசாலை வாகணங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிக்னல்களை மீறினாலோ அல்லது வீதிகளில் ட்ரெக் மாறி மாறி வாகணத்தை ஓட்டிச் சென்றாலே உடனடியாக 1000 திர்ஹம் தண்டப் பணம் அறவிடப்படுவதாகும் அத்தோடு 10 கருப்பு பொயிட் மார்க்க பதியப்படுவதாகவும் டுபாய் பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஆகவே....ஐக்கிய அரபு அமீரகத்தில் வாணம் ஓட்டும் சகல இலங்கை நண்பர்கள் அனைவரும் இது விடையத்தினை கவனத்தில் கொள்ளும்படி அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe