Ads Area

எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் மீண்டும் முஸ்லிம் காங்ரசில் சேர்ந்தனர்.



தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16) தாருஸ்ஸலாமில் வைத்து, கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.

இவர்களுடன் சேர்ந்து தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்சியில் இணைந்துகொண்டனர்.














Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe