கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல் கலைக்கழகம் கிடைக்காததனால் எமது மாணவர்கள் மொத்தமாகவே கல் விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். பல்கலைக்கழகம் மட்டுமே உயர் கல்விக்கான நிறுவ னம் அல்ல. அதையும் தாண்டி உயர் கல்விக்கான வாய்ப் புகள் அனேகம் உள்ளன. க.பொ.த. உயர் தரத்தில் தோற்றி சித்தியடையும் மாணவர் களில் சுமார் நான்கு வீதமானோரே பல்கலைக்கழக அனுமதி பெறு கின்றனர். 96 வீதமானோர் பல்கலைக் கழக வாசல்கள் வரை சென்று திரும்பு கின்றனர்.
இத்தகைய மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்ற னர். ஆனால், அவர்கள் அச்சப்படுவ தற்கு ஒன்றுமில்லை. தத்தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு போட்டித் தன்மையுள்ள தொழிற் சந்தைக்கு தம்மை தயார்படுத்துவதற் கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு நிறுவனமாக இல ங்கை திறந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.
இத்தகைய மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்ற னர். ஆனால், அவர்கள் அச்சப்படுவ தற்கு ஒன்றுமில்லை. தத்தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு போட்டித் தன்மையுள்ள தொழிற் சந்தைக்கு தம்மை தயார்படுத்துவதற் கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு நிறுவனமாக இல ங்கை திறந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.
இப்பல்கலைக்கழகம் வழங்கும் கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த முன்னர் இது பற்றிய சில அடிப் படைத் தகவல்களை முன்வைப்பது பொருத்தமானது. 1978ம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத் தின் படி 1980ம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக் கப்பட்டது. நாட்டிலுள்ள ஏனைய 14 பல்கலைக்கழகங்களில் சான்றிதழ் களுக்கு சமமான அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது. கற்பித்தலிலும் சில வேறுபாடுகளை அவதானிக்கலாம். வகுப் பறை விரிவுரைகளுக்கு மேல திகமாக தொலைக் கல்வி முறையி லும் மாணவர்களுக்கு விரிவான அறிவை வழங்கி வருகின்றது. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் இதனைக் கருத லாம்.
திறந்த பல்கலைக்கழகத்திற்கு என்றே உரித்தான கற்றல்-கற்பித்தல் முறை கள் மாணவர்களின் பல் கலைக்கழகக் கனவை நனவாக்கும் ஆற்றல் உள் ளவை. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் தம்மை இப்பல்கலைக் கழகத்தில் பதிவுசெய்துகொள்ள லாம். (தற்போது வெளிநாட்ட வர் களுக்கும் இடம் ஒதுக்கப்படுகின்றது.) திறந்த என்ற பதம் கற்றலுக்கு விரிந்த சாதகத் தன்மையை பிரதி பலிக்கின்றது. வயது கட்டுப்பாடுகள் ஏது மின்றி நேரடியாகவோ தொலைக் கல்வி முறையிலோ அறிவைப் பெறுவதற் கான வாய்ப்பை அது தருகின்றது.
01. தமது விருப்பத்திற்கு ஏற்ப, தமது தேவைகளுக்கு ஏற்ப பாடங்களைத் தெரிவுசெய்து கொண்டு கற்பதற் கான வாய்ப்பை வழங்குகின்றது.
03. தொலைக்கல்வி முறையினால் தற்செயலாக விரிவுரைகளுக்கு சமூகம் தர முடியாமல் போனாலும் வீட்டிலிருந்தே மேலதிக நேரம் ஒதுக்கி கற்கலாம்.
04. எமது தேவைகளுக்கு ஏற்ப கற்கை நெறிக்காக கால எல்லை களையும் நாமே தீர்மானிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக கால எல்லையை பிற்போட முடியும். அதேபோன்று எமது கல்வித் தகுதிக்கு ஏற்ப சில பாடங்களை தவிர்ந்துகொள்ளவும் முடியும்.
05. இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் தலைமையகம் நாவல யிலும் பிராந்திய நிலையங்கள் கொழும்பு, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட் பட 18 உப கற்கை நிலையங்களும் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட் டுள்ளன.
06. சாதாரணமாக 10 ஆண்டுகள் கராஜ்ஜில் பணியாற்றிய அனுபவ முள்ள ஒருவர் சிவில் பொறியிய லாளராக கற்று வெளியேறுவதற் கான வாய்ப்பை திறந்த பல்கலைக் கழகம் வழங்குகின்றது.
07. கடந்த 2 1/2 தசாப்தமாக தனது எதிர்பார்ப்புகளையும் இலக்குகளை யும் முழுமையாக நிறைவேற்றிய கல்வி நிறுவனமாக திறந்த பல் கலைக்கழகம் கருதப்படுகின்றது. ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்று பகிடிவதை, மாணவர் குழுக்களுக்கிடையிலான வன்முறை கள் எதுவுமே இங்கு நிகழ்வ தில்லை. மிக அமைதியான முறை யில் ஆரோக்கியமான கல்விப் பணியை திறந்த பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்றது.
08. தற்போது 30,000க்கும் மேற் பட்ட மாணவர்கள் பல்வேறு கற்கை நெறிகளை கற்று வருகின்றனர். தொழில் மையப் பாடங்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படு கின்றது. கல்விப் பீடம் மானிட வியல், சமூக விஞ்ஞான பீடம், இயற்கை விஞ்ஞான பீடம், பொறி யியல் தொழில்நுட்ப பீடங்கள் என்று நான்கு பிரதான பீடங்கள் இயங்கி வருகின்றன.
09. இவற்றின் கீழ் 18 துறைகளும் 600க்கும் மேற்பட்ட கற்கை நெறி களும் உள்ளன. சாதாரண டிப் ளோமா முதல் உயர் டிப்ளோமா, ஆரம்பப் பட்டப்படிப்பு, பட்டப் பின் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் கற்கை என பல்வேறு தரா தரங்களுடன் இயங்குகின்றது.
10. ஆசிரியர் கல்வி, முன்பள்ளிக் கல்வி, மொழி, சட்டம், முகாமைத் துவம், இயற்கை விஞ்ஞானம், சுற்றாடல் கல்வி, தொடர்பாடல் என்பன முக்கிய பாடநெறிகளாக உள்ளன.
Via - Udunuwara news