சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கோரோனா பாதுகாப்பு அங்கி கோவிட் 19 ஹிட் சம்மாந்துறை வைத்தியசாலை, பொலிஸ் நிலையத்திற்கு கையளிப்பு.
(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பரமௌன்ட் என்ர பிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபாருமான எஸ்.எம்.எம்.பசீலின் அனுசரனையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு கோரோனா பாதுகாப்பு அங்கி கோவிட்-19 ஹிட் வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் வைத்து இன்று (30) கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டக்டர் எம்.எச்.எம்.ஆஷாத், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, கே.டி.எஸ்.ஜயலத், பரமௌன்ட் என்ர பிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபாருமான எஸ்.எம்.எம்.பசீல் சுகாதார துறை உத்தியோகத்தர்கள், அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.