ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டில் அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் இலங்கையிலும் இந்த தொற்று நோய் இனங்காணப்பட்டுள்ளதால் இந்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தி கொரோனா தொற்றுக் கிருமியை - உச்ச அர்ப்பணிப்புடன் எதிர்த்துப் போராடி நிற்கும் எமது நாட்டின் முன்னரங்கப் பணியாளர்களாகிய - சுகாதார சேவையினர், காவல்துறையினர், முப்படையினர் அவர்களை கடமையில் அமர்த்தி மக்களை பாதுகாக்கும் இத்திட்டம் மிகவும் வரவேற்கதக்கதாகும்.
இத்திட்டத்திற்கும் நாட்டின் சட்டத்திற்கும் துனை போவது எம் அனைவரினதும் கடமைப்பாடாகும். அதேபோன்று போக்குவரத்துச் சேவையினர், நுகர்வோர் சேவையினர், ஊடகத் துறையினர் மற்றும் ஏனைய அனைத்து அரச மற்றும் அரசு-சாரா பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை சார்பாக வாழ்த்துக்களை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டின் எந்த பகுதியிலும் - ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வேளைகளில் - பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாக எப்போதும் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றது எனும் தொனிப்பொருளின் கீழ்
இந் நிகழ்வில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு அறிவுரைகள்
01. தவிர்க்க இயலாத அத்தியாவசி தேவையின் போது மட்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்
02. அலுவலகங்கள், கடைகள், பேரூந்து வண்டிகள், புகையிரதங்கள் போன்ற பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியை கட்டாயமாகப் பேண வேண்டும். முடிந்தவரை அடுத்த ஆட்களிலிருந்து ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தை நீங்கள் பேணிக்கொள்ளுங்கள்.
04. வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே கடைகளுக்கு செல்லுங்கள்.
05. வழங்கப்பட்டிருக்கும் சுகாதார ஆலோசனைகளை எப்போதும் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். பொது இடங்களிலோ, அல்லது தனிமையில் இருக்கும் போது கூட - இருமல் அல்லது தும்மல் வந்துவிட்டால் - அறிவுறுத்தப்பட்டுள்ள வகையில் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.
06. வயதானவர்கள், அவசியமற்ற எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். வயதானவர்களை வீட்டுக்கு வெளியில் யாரும் அனுப்பாதீர்கள்!
07. கடையில் பொருட்களை வாங்கும் போது - அடுத்தவரில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தைப் பேணுங்கள்!
08. பொருட்களை வாங்கும்போது நீங்கள் கடையில் செலவிடும் நேரத்தைக் குறைத்து - சன நெரிசலில் கழிக்கும் காலத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள்!
09. கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் - கடைகளுக்குள் நெருக்கமாக அதிகமானவர்களை வரவிடாதீர்கள்!
10. வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன் - அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உங்களைப் பூரணமாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்!