கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் விரோத அரசியல் செய்யப்பட்டு வருகிறது. இது ஆபத்தானது. இதை நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
யாழ் வடமராட்சியில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் விளக்கமளிப்பு கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
கிழக்கில் அரசியல் செய்யும் கருணா ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார். பிள்ளையான் ஒன்றை தலைமை தாங்குகிறார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என ஒன்று இயங்குகிறது. இவை எல்லாம் எமக்கு எதிரானவை.