(A.Azmin)
றம்ஸி றாசிக்; இனவாதத்துக்கு எதிரான ஒரு மிகத்துணிச்சலான ஒரு எழுத்தாளன் இவரது எழுத்துக்கள் சிங்கள-முஸ்லிம் நல்லிணக்கம் சார்ந்தவைகள், நசுக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் சார்ந்தவை.
இலங்கையில் சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பரப்படும் நச்சுக்கருத்துக்களுக்கு உரியபதில்களை வழங்கி சிந்தனாரீதியான போராட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என தனது முகநூல் குறிப்பொன்றில் இவர் கருத்துப் பதிவிட்டிருந்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
அநிதியிழைக்கப்பட்டிருக்கின்ற சகோதரர் றம்ஸி றாசிக் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஒரு பாரிய சமூக அழுத்தமொன்றினை உடனடியாக முன்வைக்கவேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பல்லவா? இவருக்கு நீதிகிடைப்பதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்பட முன்வருவோம்.