(பாறுக் ஷிஹான்)
சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் என்பவரே இச்சாதனையை கண்டுபிடித்தவராவார்.சாய்ந்ததமருதைச் சேர்ந்த இவர் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவராவார்.
மேலும் குறித்த புதிய கண்டுப்பினை ஊக்குவிக்க இறைவனும் பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த அவர் மின்சார வசதி அற்ற பகுதிகளிலும் இந்த சாதனத்தை உபயோக படுத்த முடியும் என தெரிவித்தார்.