சவுதியில் இன்று மட்டும் கொரோனாவினால் 5 பேர் மரணம்! பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் இன்று (04.04.2020) மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 5 பேருடன் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்து.
சவூதியில் இதுவரை 2385 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை சவுதி அரேபியாவில் 488 பேர் இந்நோய் தொற்றுக்கு உள்ளாகி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.