முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் மூத்த போராளியும், உயர்பீட உறுப்பினருமாகிய எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
உலகம் பூராகவும் இன்று ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சோதனையின் உச்சம்,தொழுகைக்காக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றோம். அவ்வாறே இப் பெருநாள் தொழுகைக்கூட தத்தங்களின் இல்லங்களிலேயே மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்