Ads Area

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம்.

காரைதீவு  நிருபர்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் (12) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.

சம்மாந்துறை கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கொரோனா மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் செயற்றிட்டம் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe