முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது இதுவரை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலையே காணப்படுகின்றது இந் நிலையில் தற்போது நாம் புனித மிகு ரமழான் மாதத்தை முழுமை செய்து அதனைத் தொடர்ந்த ஈத்துல் பித்ர் நோன்பும் பெருநாளை நாளை கொண்டாட தயாராகவுள்ளோம்.
தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகளை எளிமையான முறையில் பெரும்பான்மை இன சமூகம் கொண்டாடியிருந்த நிலையில் நாம் ஆர்ப்பரித்து நமது பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக் கொண்டால் அது நம் சமூகத்தின் மீது நாமே கெட்ட பெயரை ஏற்படுத்தி விடக் காரணமாகி விடும் அது மேலும் எமது சமூகத்தின் மீது பழி போடும் செயலாக மாறிவிடும் என்பதை நாம் அறிந்து நடக்க வேண்டும்.
நமது நாட்டில் சுகாதார தரப்பினால் கொரோனா வைரஸினை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பங்களில் நாமும் அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு முஸ்லிங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார்கள் என்ற பழி சொல்லை சுமக்க கூடியவர்களாக நாம் மாறிவிடக் கூடாது. பாவ மன்னிப்பையும் நரக விடுதலையையும் இலக்காகக் கொண்டு பயணிக்கும் நாம் மாற்று சமூகத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கின்ற அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஐ.எல்.எம். மாஹிர்
பாராளுமன்ற வேட்பாளர்
அகில இலங்கை மக்கள் காங்ரஸ்.