Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையினால் மக்கள் நாளாந்தம் பயண்படுத்தும் இடங்கள் புனர்நிர்மாணம்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் நிறுவனங்களை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் பிரதேச சபையின் ஊழியர்களினால் புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அமீர் அலி சிறுவர் பூங்காவில் நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட சுற்று வேலி திருத்தம் செய்யப்பட்டதுடன் பூங்காவிலுள்ள தளபாடங்களின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வேலைகள் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe