சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந் நாட்டு அரசாங்கம் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது இதில் ஒரு அங்கமாக தற்போது சவுதி அரேபியாவில் உள்ள நாணயத் தாள்களையும் மற்றும் நாணயக் குற்றிகளையும் தனிப்படுத்தி சுத்தப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
சவுதி அரேயா நாட்டுக்கு உள்ளே உள்ள நாணயங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த நாணங்கள் போன்றவற்றை அவை எங்கிருந்து தருவிக்கப்பட்டது என்பதின் அடிப்படையில் அவை தனிமைப் படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்படவுள்ளாக சவுதி அரேபியா நாணய ஆணையகம் தெரிவித்துள்ளது.
அரேபியா நாணய ஆணையகம் மேலும் தெரிவித்ததாவது, நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் பயன்படுத்த பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த அவைகளுக்கு ஒரு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது பின்னர் அவை கடுமையான படிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும் அதில் மிக அழுக்கான நாணயத்தாள்கள் மற்றும் குற்றிகள் காணப்படுமிடத்து அவைகள் உடனடியாக அழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்