யுவன் சங்கர் ராஜா அவரது தாயார் மறைவிற்குப் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்லிமாக மாறியவர், அவரது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து யுவனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று ஷாஃப்ரூன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இஸ்லாத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்திருக்கும் யுவன் சங்கர்ராஜா, “இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் விஷயம் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை என்பது தான். நாம் தொழுகைக்குச் செல்லும் போது நம்முடைய வலது, இடது பக்கத்தில் யார் வேண்டுமானாலும் நின்று தொழுகலாம். அப்போது முன்னால் நிற்க வேண்டும் என்று யாருக்கும் தனியாக முன்னுரிமை கிடையாது. இது எனக்குப் பிடித்த முதல் விஷயம்.
செய்தி மூலம் - நிவுஸ்18 தமிழ்நாடு.