Ads Area

வெளிநாடுகளுக்கு பணிக்கு சென்று ஏப்ரல் 17க்குப் பின் இலங்கை திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

தொழில் நிமித்தம் வௌிநாடு சென்று நாடு திரும்பியவர்கள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தரவுகள் சேகரிக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 17 திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார். கொரியா, இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெருமளவானோர் நாடு திரும்பினர்.

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பி கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் தொழிலுக்கு திரும்ப முடியாமற் இருக்கும் பணியாளர்கள், 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Qatar Tamil.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe