Ads Area

சவுதி அரேபியா ரியாத்தில் விபச்சார விடுதிகள் நடத்திய கும்பல் கைது..!

ரியாத்தின் தெற்கு பகுதியில் உள்ள அல் மனாக் மாவட்டத்தில், இரண்டு விபச்சார விடுதியை நடத்தி வந்த இரண்டு பங்களாதேஷ் நாட்டினரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அங்கு விபச்சார தொழில் நடத்தி வந்த மொத்த கும்பல் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபச்சார விடுதிகளை நடத்திவந்தவர்கள் வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களை குறிவைத்து, அவர்களை பாலியல் தொழிலாளர்களாக மனம் மாற்றி இத்தொழிலுக்கு அழைத்து சென்றதாக காவல்துறையின் ஊடக செய்தி தொடர்பாளர் கர்னல் ஷேக்கர் அல் துவைஜ்ரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சந்தேகத்திற்குரிய இந்த நபர்கள் ஏராளமான வீட்டு பணிப் பெண்களை கவர்ந்ததாகவும், அவர்களது ஆதரவாளர்களிடம் (sponsors) இருந்து தப்பித்து வர உதவி செய்ததோடு, அவர்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அல் துவைஜ்ரி தெரிவித்தார்.

காவல்துறையினர் விபச்சார விடுதிகளில் சோதனை நடத்தியதில் 7 பங்களாதேஷ் ஆண்கள் பிடிபட்டனர். பிடிபட்டவர்கள் பெரும்பாலும் நல்ல பின்னணி உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த ஆசிய தேசத்தை சேர்ந்த 40 மற்றும் 50 வயதுக்குட்பட்ட எட்டுப் பெண்களையும் சவூதி காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பபடுவதற்கு முன்பு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe