கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 119,420 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (03.09.2020) மட்டும் புதிதாக 214 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2906 வீழ்ச்சியடைந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 644,904 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 119,420 பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
Qatar Tamil.

