Ads Area

சம்மாந்துறை கல்லரிச்சல் வீதியில் போக்குவரத்துக்கு இடையூராகவுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை.

சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக  கல்லரிச்சல் வீதியில் பிரதேச மக்களும், போக்குவரத்துக்கும் இடையூராகவுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மழை காலங்களில் வீதியோரங்களில் காணப்படும்  மரங்கள் உடைந்து விழுவதினால் பிரதேச மக்களும், வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கும்  ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்கள் அகற்றப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் கண்கானிப்பில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை  தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக், கிராமசேவக  உத்தியோகத்தர், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe