Ads Area

மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய  பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய  பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் (26) வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்திபன் அவர்களும் கணக்காளர் செல்வி என்.ஜயசர்மிகா அவர்களும் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe