துபாய் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாது நடனமாடி அநாகரீகமாக நடந்து கொண்ட பாகிஸ்த்தான் நாட்டவர் ஒருவரை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஓடும் மெட்ரோ ரயிலுக்குள் அநாகரீகமான முறையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது அதனை பலரும் வீடியோ ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் அந்த வீடியோ வைரல் ஆகியதைத் தொடர்ந்து குறித்த நபர் மற்றவர்களின் தனியுரிமையை மதிக்காமல் தொந்தரவு செய்ததற்காகவும், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் மற்றும் முகக்கவசனம் அணியாது கோவிட் -19 விதிகளையும் மீறியும் உள்ளார் என்ற அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து பாதுகாப்புத்துறை இயக்குநர் பிரிகேடியர் ஒபைத் அல் ஹத்பூரின் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையினை சரியாக கடைப்பிடித்திருந்த வேளை குறித்த நபர் மாத்திரம் முகக் கவசம் கூட அணியாது நடனமாடியுள்ளார். இதனால் 1987 ஆம் ஆண்டிற்கான ஃபெடரல் எண் 3 சட்டத்தின் 361 வது பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வோருக்கு, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிக ஒலியுடன் பாடல்களை கேட்போருக்கு 6 மாதங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையும், 5000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் துபாய் காவல்துறையின் போக்குவரத்து பாதுகாப்புத்துறை இயக்குநர் பிரிகேடியர் ஒபைத் அல் ஹத்பூரின் மேலும் தெரிவித்துள்ளார்.