Ads Area

நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த மங்கள சமரவீரவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு வருந்துகிறேன்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தி, இலங்கை மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கத் தீவிரமாகப் பங்களித்து, நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு, நான் மிகவும் வருந்துகிறேன்.

அன்னாரது மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe