Ads Area

கல்முனையில் சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

 ( எம். என். எம். அப்ராஸ்,ஏ.எல். எம்.ஷினாஸ்)

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள   சமூர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கான சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச  செயலக சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்டமுகாமையாளர்  ஏ. ஆர். எம். சாலிஹ்  தலைமையில் அண்மையில் (30.07.2021) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே . லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவு சான்று பத்திரங்களையும்,காசோலையினையும் வழங்கிவைத்தார்.

சமூர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமூர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள கல்விப்பொதுத்தராதர சாதரண தரம் சித்தியடைந்து (2020/2022 கல்வியாண்டில் )உயர்தரக் கல்வியை தொடர்கின்றமாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமூர்த்தி சிப்தொர  புலமைப்பரிசில் வழங்ப்படுகின்றது.

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மருதமுனை , நட்பிட்டிமுனை , கல்முனை ஆகிய பகுதியில்  29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து 245 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,சமூர்த்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ் கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா,உதவி முகாமையாளர் எம்.எம்.மன்சூர்,சமுர்த்தி சமூக அபிவிருத்திஉத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், சமூகப்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.கமால்தீன், திட்டஉதவியாளர் ஏ.எஸ்.எம்.ஜௌபர் மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள்  ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe