Ads Area

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய துப்பாக்கி ரவைகள் மீட்பு.

 பாறுக் ஷிஹான்

கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அம்பாரை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் வியாழக்கிழமை (17)   முற்பகல் புலனாய்வுத் தகவலுக்கமைய பிளாஸ்டிக் வடிவமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதிங்கிய குறித்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கையினை கல்முனை கடற்படையினர் மேற்கொண்டதுடன், குறித்த துப்பாக்கி ரவைகள் புதிதாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கைப்பற்றப்பட்ட ரவைகளை கல்முனை  பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe