Ads Area

குவைத்தில் பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - குவைத் வாழ் இலங்கையர்களுக்கு துாதரகம் முக்கிய அறிவித்தல்.

 



அறிவிப்பு.


பொதுமன்னிப்பின் கீழ் தாயகம் திரும்ப விரும்புவோரை தூதரகத்தில் பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் 2024 மே மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.


பொதுமன்னிப்பின் கீழ் தாயகம் திரும்ப விரும்புபவர்களது தற்காலிக பயண ஆவணங்களை தயார் செய்யவும் குவைத் அரச நிறுவனங்களின் தேவையான அனுமதியை பெறவும் குறைந்த பட்சம் இரண்டு வார காலம் தேவைப்படுகிறது. ஆகையால் குவைத் அரசாங்கம் ஜூன் 17, 2024 வரையிலான மூன்று மாத காலப்பகுதியை பொது மன்னிப்புக் காலமாக அறிவிப்பு செய்துள்ள போதிலும் தாயகம் திரும்ப விரும்புவோரை தூதரகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை தினத்துடன் நிறைவுபெற உள்ளது.


எனவே, பொதுமன்னிப்பின் கீழ் தாயகம் திரும்ப பயண ஆவணங்களை பெற விரும்பும் அனைத்து இலங்கையர்களும் 2024ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை தினத்துக்கு முன்னர் தூதரகத்தில் தம்மை பதிவு செய்து கொள்வது அவசியமாகும் என்பதனை அறியத் தருகிறோம். 


தகைமை பெற்ற அதிகாரி 

இலங்கை தூதரகம் / குவைத் 

(பதிவேற்றம்: 2024.04.24)






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe