Ads Area

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர்  வெள்ளிக்கிழமை (22) சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமம் எனும் பிரதேசத்தில் மாலை வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளினால் மூவரை கைது செய்துள்ளனர்.


சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரும், சம்மாந்துறை  பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரிடமும் இருந்து 600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குமார சிங்க (25955), றபீக் (62053), இஸ்மாயில் (64499), யோகேஸ்வரன் (4943) உள்ளிட்ட அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe