Ads Area

சம்மாந்துறை வீரமுனையில் 20 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வீரமுனை பல்நோக்கு கூட்டுறவு வீதியில் கசிப்புடன்  ஒருவரை நேற்று சனிக்கிழமை (14) இரவு 08.00 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.


சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சுட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 லீட்டர் கசிப்பையும், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.


வீரமுனை 04, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 20 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வீரமுனை பிரதேசத்தில் உள்ள பிரபல வியாபாரி ஒருவருடைய கசிப்பு என அறியக் கிடைத்துள்ளது. 


இதனையடுத்து, சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்னமல்லவின் பணிப்புரைக்கமைய உப பொலிஸ் பரிசோதகர்களான ஜெயஸ்ரீ மற்றும் விஜயஸ்ரீ, விசேட அதிரடிப் படை சார்ஜன் சாகர,சார்ஜன் பண்டார, சாரதி குமார ஆகியோரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe