சம்மாந்துறை பிரதேச சபைக்கான சம்மாந்துறை 10 ஆம் வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் வ.சுசிகரன்,சு.சங்கர்,கி.ஜனித்தன் அவர்களின் பிரச்சாரக் காரியாலயம் நேற்று (26) சனிக்கிழமை மாலை சம்மாந்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சம்மாந்துறை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.