சம்மாந்துறை உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் ஹனா மகளிர் சங்கத்தின் மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவி எ.முஸத்திகா அவர்களின் இல்லத்தில் 16. 10. 2025 அன்று பிற்பகல் 04:00 மணி அளவில் நடைபெற்றது.
இவ்வொன்று கூடல் நிகழ்வுக்கு சம்மாந்துறை வீரமுனை வட்டார கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம் .ஐ.எம்.றிஸ்விகான் கலந்து கொண்டார் இச் சங்கத்தின் அபிவிருத்திக்கு தேவையான சகல ஆலோசனைகளை வழங்கியதுடன் இம் மகளிர் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தனது சமகால அரசியல் செயற்பாடுகள் பற்றியும் கலந்து உரையாடினார்.



