சம்மாந்துறையில் கடந்த சனிக்கிழமை (06.12.2025) பிரபல உணவகம் ஒன்றில் கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, இன்று (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பேணும் விதமாக, கெளரவ நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பை வழங்கியுள்ளது:
உணவக உரிமையாளருக்கு 48,000/- அபராதம் விதிக்கப்பட்டது
எதிர்வரும் 19.12.2025 வரை உணவகத்தை மூடி, அனைத்துத் திருத்த வேலைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமையச் செய்தல்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பிரகாரம், எமது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHIs) குழுவினர், இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தை முறையாக மூடி (சீல் வைத்து) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
குறித்த உணவகம் தொடர்பில் முன்னர் வந்த செய்தியின் விபரம் - https://www.sammanthurai24.com/2025/12/MOH-sammanthurai_01052249351.html

